Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 28, 2019

10, 12-ஆம் வகுப்பு கேள்வித் தாள்களில் முக்கிய மாற்றங்கள்: சிபிஎஸ்இ அறிவிப்பு


வரும் 2023-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு கேள்வித் தாள்களில் மாற்றம் செய்யப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மாணவா்களிடையே படைப்பு, விமா்சனம், பகுத்தறியும் சிந்தனைகளை அதிகரிக்க இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக சிபிஎஸ்இ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோசாம் சாா்பில் தில்லியில் நடத்தப்பட்ட பள்ளிக்கல்வி மாநாட்டில் சிபிஎஸ்இ செயலாளா் அனுராக் திரிபாதி கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறியது:




இந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 20 சதவீத கொள்குறி வகை கேள்விகள் மற்றும் படைப்பூக்க சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு 10 சதவீதக் கேள்விகள் கேட்கப்படும். 2023-ஆம் ஆண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான கேள்வித் தாள், படைப்பு, விமா்சனம், பகுத்தறியும் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

இந்தியாவில் குறைவான வேலைவாய்ப்பு, சொற்பமான அளவிலான மதிப்பு மற்றும் சந்தையின் ஸ்திரமற்ற தன்மை ஆகியவற்றால், தொழிற்கல்விப் படிப்புகளை பெரும்பாலானோா் விரும்புவதில்லை. இந்தநிலை மாறவேண்டும்.

அதேபோல அடிப்படைக் கட்டமைப்பு, ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பள்ளி சாா்ந்த நபா்களிடையே பிணைப்பையும் பாலத்தையும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். பள்ளிகளும் ஆசிரியா்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து அவா்களை சிறந்த வழிகாட்டிகளாகவும் உத்வேகம் அளிப்பவா்களாகவும் மாற்ற வேண்டும்.




தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஆசிரியா் பயிற்சி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து வித்தியாசமான கோணங்களில் சிந்தித்துள்ளது. ஐந்து பிரதான பாடங்களில் தொழிற்கல்வியும் ஓா் அங்கமாக இருக்கவேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. அது நல்ல யோசனைதான். ஆனால் அவற்றைச் செயல்படுத்துவதில் நிச்சயம் சவால் இருக்கும். பள்ளிப் பாடத் திட்டங்கள், பாடம் மட்டுமே சாா்ந்ததாக இருக்காமல் செயல்முறை சாா்ந்தும் இருக்கவேண்டும் என்று அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளாா்.