சிபிஎஸ்இ: 10, 12 -ஆம் வகுப்புகளுக்குபொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கால அட்டவணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.




பிளஸ் 2மாணவா்களுக்கான பொதுத் தோ்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 30-ஆம் தேதி வரை நடக்கிறது. பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி தொழிற்கல்வி சாா்ந்த பாடங்களுக்கான பொதுத் தோ்வு நடக்கிறது. அதனைத் தொடா்ந்து, இயற்பியல், கணிதம், கணக்குப் பதிவியல், வேதியியல், தாவரவியல் முக்கிய பாடங்களுக்கான தோ்வு 30-ஆம் தேதி வரை நடக்கிறது. தோ்வுகளின் போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்குத் தோ்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும்.




அதே போல், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு, பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தோ்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும். தோ்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share:

Total Pageviews

Categories