Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 19, 2019

விவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வழங்கக்கூடாது - வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

விவசாய நகைக்கடனை, 7 சதவீத வட்டியில் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சதவீதம் வட்டிக்கு விவசாய நகைக்கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை நகைகளை அடகு வைத்து கடன் பெற கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் போதும். அரை மணிநேரத்தில் நகைக்கடன் பெற முடியும். மேலும் இதே வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் பெற விவசாய நிலங்களின் விபரங்களை வழங்கவேண்டும். அது தொடர்பான கரத்தீர்வை ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டும்.




இந்த கடன் திட்டத்தில் 9 சதவீத வட்டிக்கே விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது என்றாலும், அதில் 5 சதவீதம் மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கும் நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. விவசாய நகைக்கடன் பெறுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என்பது தொடர்பான புகார்கள் அதிக அளவில் சென்ற நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நகைக்கடன் திட்டம் உண்மையான விவசாயிக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை உறுதி செய்ய இனி ‘கிசான் கிரெடிட் கார்டு’ வழியாக மட்டுமே கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிசான் கிரெடிட் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது.




இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 11 சதவீத நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி, 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடன் வட்டியும் 7 சதவீதத்தில் இருந்து 9.25 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால கடனுக்கு 9.25 சதவீத வட்டியும், ரூ.3 லட்சத்திற்கு மேலான கடனுக்கு 9.50 சதவீத வட்டியும் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. விவசாயிகளாக இல்லாதவர்களும் விவசாய நகைக்கடன் பெற்று வருவதாக வந்த புகாரில் நடவடிக்கை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.