Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 31, 2019

காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


மும்பையில் செயல்பட்டு வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Young Professionals




காலியிடங்கள்: 75

சம்பளம்: மாதம் ரூ.25,000 - 30,000

வயதுவரம்பு: 10.01.2020 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று டேட்டா அனலைசிஸ் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற பிரிவுகலில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 2020 ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை: www.kvic.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2020