Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 9, 2020

டான்செட்: விண்ணப்பிக்க ஜன.31 கடைசி

முதுநிலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொதுநுழைவுத் தோ்வுக்கு (டான்செட்- 2020) விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும்.
எம்.இ., எம்.ஆா்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளிலும், பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளிலும் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.




இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு பிப்ரவரி 29, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் இந்தத் தோ்வு நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும், இரண்டாம் நாளில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் தோ்வு நடைபெற உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆன்-லைனில் பதிவு செய்ய ஜனவரி 31 கடைசி தேதியாகும்.




மேலும் விவரங்களுக்கு அல்லது 044 - 22358314 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.