Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 28, 2020

பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் அனைவரும் 5 & 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்கள் விபரங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!


* RSTC | NRSTC சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று வரும் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் அனைவரும் இப் பொதுத் தேர்வினை எவ்வித இடர்பாடின்றி எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்களின் விவரங்களை EMIS இணைய தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது .




* மேலும் , இச்சிறப்புப் பயிற்சி மையங்களில் பிற மாநிலத்தை சார்ந்த இந்தி , பெங்காலி , ஒடியா , தெலுங்கு , மலையாளம் மற்றும் இதர மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர் .




* இம்மாணவர்களும் மேற்கண்ட பொதுத் தேர்வினை அவர்தம் தாய்மொழியில் அல்லது அவர் விரும்பும் மொழியில் எவ்வித இடர்பாடின்றி எழுதுவதற்கு ஏதுவாக தகுந்த முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை மூலம் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .