Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 1, 2020

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!


தில்லி காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபில் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 649 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தில்லி காவல் துறை

பணி : கான்ஸ்டபில் (AWO/TPO)




மொத்த காலிப் பணியிடங்கள் : 649

கல்வித் தகுதி : 12ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக் மற்றும் ஆப்ரேட்டர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் சிஸ்டம் தொழிற் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி : கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் கணினியில் 15 நிமிடத்தில் 1000 எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பதாரர் 100 ரூபாயினை ஆன்லைன் வழியாக கட்டணமாகச் செலுத்த வேண்டும்.




எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.delhipolice.nic.in என்னும் இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.delhipolice.nic.in/Asst.%20Wireless%20Operator.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.