Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 30, 2020

கொரனோ வைரஸ் பீதியும்,தீர்வும்

-அக்குஹீலர் சே.அருண் குமார்
2002 நவம்பர் மாதத்தில் ஹாங்காங்கில் கண்டறியப்பட்டு உலகெங்கும் பீதியை கிளப்பிய சார்ஸ் நோய் பற்றி நினைவிருக்கிறதா?
அந்த நேரத்தில் ரஷ்ய அறிவியலாளர் செர்ஜி கோலெஸ்னிகோவ் "சார்ஸ் சதித்திட்ட கோட்பாடு " ஒன்றை அறிவித்தார். சார்ஸ் வைரஸ் இயற்கையாக உருவாக வகையில்லை என்றும் தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி வைரஸ்களின் செயற்கை முறை கூட்டிணைவே சார்ஸ் வைரஸ் என்றும் ஆய்வறிக்கை வெளியிட்டார். இது ஓர் ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என வாதிட்டார். இதனடிப்படையில் இந்த வைரஸை ஐக்கிய அமெரிக்கா, வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதாரத்தை பாதிப்படையத் தொடர்ந்த உயிரியல் போராக சீனாவின் அன்றைய இணையதள உரையாடல்களில் முதன்மை பெற்றது.இது ஒருபுறம் இருக்கட்டும்.




இன்றளவில் இந்த நோய் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜுலை 2003க்குப் பிறகு எந்த மனிதருக்கும் இந்நோய் ஏற்படவில்லை. இருப்பினும், பெரியம்மை போல இந்நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூற இயலாது (அதாவது அழிக்கப்படுவதற்கு முன்பே தானாக அழிந்து விட்டது அல்லது பதுங்கி விட்டது) என உலக சுகாதார நிறுவனம் கூறிவந்த நிலையில் இப்போது "கொரனோ வைரஸ்" பற்றிய பீதி பரப்பிவிடப்பட்டுள்ளது.
சார்ஸ் வைரஸூம், தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள கொரனோ வைரஸூம் மனிதர்களுக்கு ஒரே மாதிரியான உடல் தொந்தரவை ஏற்படுத்துபவை அதாவது சளி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.




முதன்முதலாக 1960களில் மனிதர்களின் சைனஸ் பகுதியில் இருந்த சளியில் கொரனோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸிற்கு Human coronavirus 229E, மற்றும் oc43 என பெயரிடப்பட்டது. இந்த குடும்பத்தைச் சார்ந்த வைரஸ்கள் 2003 இல் SARS-CoV எனவும் 2004 இல் HCoV NL63 எனவும் 2005 இல் HKU1எனவும், 2012 இல் MERS-CoV என கண்டறியப்பட்டது.
தற்போது 31 டிசம்பர் 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரனோ வைரசின் ஒரு புதிய வடிவம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.1960களில் கண்டறியப்பட்ட இந்த கொரனோ வைரஸ் வகையறாகளுக்கு, நவீன மருத்துவத்தில் மனிதர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சிகிச்சையோ பாதுகாப்பு தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்க்கான சிகிச்சை முறை மற்றும் தடுப்பூசி மருந்துகளை கண்டறிய உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.




நவீன மருத்துவத்தில் சிகிச்சை/பாதுகாப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் நாம் என்ன செய்யலாம்?
கொரனோ வைரஸ் பாதிப்பு மட்டுமல்ல எதிர் காலத்தில் வரும் எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறும் வழிகளை ஐந்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் "அக்குபங்சர் மருத்துவம்" வாயிலாக அறிந்து கொள்வோம்.




அக்குபங்சர் என்பது சிகிச்சை முறை மட்டுமல்ல வாழ்வியல் முறை என எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் சொல்லி வருகிறோம்.
உடலில் தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்டால் அதிலிருந்து மீளவும் அடிப்படை "நோய் எதிர்ப்பாற்றல்" என்பதை யாராலும் மறுக்க இயலாது. எனவே நோய் எதிர்ப்பாற்றலை முழு வீரியத்துடன் வைத்துக் கொள்வதன் மூலம் நோய் வரும் முன்பே தடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? மிக எளிதான விஷயம்தான்!




உங்கள் உடலின் அறிவிப்புகளுக்கு மதிப்பளித்தல்
1. பசித்தால் மட்டுமே உணவு!
2. தாகம்!
3. தூக்கம்!
4. இரசாயன மருந்து, உணவு, பான பொருட்களை தவிர்த்தல்!
5.மனக்குழப்பம் இன்றி இருத்தல்
சரி, இதை பின்பற்றாததால் இப்போது உடலில்தொந்தரவு வந்துவிட்டது என்ன செய்யலாம்?
மேற்கூறிய வாழ்வியல் முறைகளை கடைபிடித்து, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ந(ப)லமடையும்.