Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 30, 2020

பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'ஹைடெக் ஸ்மார்ட்' ஆய்வகம் மற்றும் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், மாணவர்களுக்கு, மின்னணு முறையை பயன்படுத்தி, பாடம் எடுக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக, மாநில அளவில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.




கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், பொருளியல், கணித பதிவியல் என, அனைத்து பாட ஆசிரியர்களுக்கும், 'ஹைடெக் ஸ்மார்ட்' வகுப்பு எடுக்க பயிற்சி தரப்பட உள்ளது.சென்னையில், நேற்று முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. நான்கு நாட்களுக்குபயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.