பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. இந்த பழத்தில் உள்ள குளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம். அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு, உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது. தொப்பையை கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலியை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகை தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும். குழந்தைகளுக்கு அன்னாசி இலைச்சாறு வயிற்று புழு கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசிப் பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.