Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 29, 2020

கற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி?


அரசு நடத்தும்
விளையாட்டுப்
பள்ளிக்கூடங்களும்குழந்தைகளுககு வலுவானகல்வி அடிப்படைகளைக்கற்றுக்கொடுப்பதில்பின்தங்கியுள்ளன என்று2019-க்கான 'அசர்'ஆய்வறிக்கைதெரிவிக்கிறது. கல்விக்கொள்கையில்மாநிலங்களுக்குஇடையிலானவேறுபாடுகளையும் இந்தஅறிக்கைசுட்டிக்காட்டியிருக்கிறது.




முறையான கல்வி பெறக்குழந்தைகளின்குறைந்தபட்ச வயது 6 என்றுஅரசு நிர்ணயித்திருக்கிறது.ஆனால், 6 வயது நிரம்பாதகுழந்தைகளை முதல்வகுப்பில் சேர்ப்பதுஅதிகமாக இருக்கிறது. எந்தவயதில் ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும் என்பதில்மாநிலங்கள் கண்டிப்பானவிதிகளைவைத்திருக்கவில்லை.


இதனால், அரசுப்பள்ளிக்கூடங்களில் 4 வயது, 5 வயது மாணவர்கள்சேர்ந்து படிப்பது மொத்தமாணவர் எண்ணிக்கையில்25%-ஆக இருக்கிறது.தனியார்ப்பள்ளிக்கூடங்களில்குறைந்த வயதுமாணவர்கள் சேர்வது 15%-ஆக இருக்கிறது. மேலும்,அங்கன்வாடிப்பள்ளிகளுக்குச் செல்லும்குழந்தைகளின் கற்றல்திறன், தனியார்ப் பள்ளிக்குழந்தைகளுக்கு ஈடாகஇல்லை. முறையாகவடிவமைக்கப்பட்டவகுப்பறைச் சூழல்இருந்தால் மட்டுமேபிள்ளைகளின் கற்றல்திறன் நன்றாக இருக்கிறது.





அரசுப் பள்ளிகளில்இரண்டாம் வகுப்பில்படிக்கும் ஏழு வயதுமாணவர்களில் மூன்றில்இரண்டு பங்கினருக்கு முதல்வகுப்புப் பாடப்புத்தகத்தையே படிக்கத்தெரியவில்லை. மூன்றாவதுவகுப்பில் பயிலும்மாணவர்கள் முதல் வகுப்புப்பாடப் புத்தகங்களைச்சுமாராகவேவாசிக்கின்றனர். கூட்டல்,கழித்தலிலும் இதேநிலைமைதான். அரசுப்பள்ளிக்கூடங்களைவிடக்குறைவான ஊதியம் பெறும்ஆசிரியர்கள் பணிபுரியும்தனியார்ப் பள்ளிகளில்மாணவர்களின் கற்றல்திறன் சற்றே கூடுதலாகஇருப்பதை இந்த அறிக்கைதெரிவிக்கிறது. 3 வயதுமுதல் 6 வயது வரையிலானகுழந்தைகளுக்குஅளிக்கப்படும் கல்வி,மிகவும் வலுவற்றஅடித்தளத்தில்தொடங்குகிறது, கற்பனைத்திறனுடன் கற்பதற்கு இதில்வாய்ப்பே கிடையாது.




அரசின் நிர்வாக அமைப்புதன்னுடைய பங்குக்கு நன்குபயிற்சி பெற்ற, லட்சியமுள்ளஆசிரியர்களை அளிப்பதில்ஆர்வக்குறைவுடன்செயல்படுகிறது.குழந்தைகள் நன்கு படிக்கஎவ்வகை நூல்களைக்கொடுக்கலாம்,ஆசிரியர்களை எப்படிஆர்வமுள்ளவர்களாகமாற்றலாம் என்பதைக் கூறநிறைய புத்தகங்கள்இருக்கின்றன.நிதியாதாரம்கூடஇருக்கிறது. தரமானகல்வியைத் தர வேண்டும்என்ற உறுதியை மட்டுமேஅரசு காட்ட வேண்டும்.ஆரம்பப் பள்ளிக்குமுன்னதாகப் பயிலும்இடங்களிலும்அங்கன்வாடிகளிலும் நன்குபயிற்சி பெற்றஆசிரியர்களைநியமிப்பதுடன், படிப்பதற்குத்தேவைப்படும்



அனைத்துவசதிகளையும் அரசுகள்செய்ய வேண்டும்.ஆசிரியர்களுக்கானபயிற்சிகளிலும் கூடுதல்அக்கறை அவசியம்.அங்கன்வாடிப்பள்ளிக்கூடங்களுக்கு நல்லகட்டிடம் உள்ளிட்டவசதிகளையும் செய்துதரவேண்டும். இவையெல்லாம்சாத்தியமாகும்போதுதான்,அரசுப் பள்ளிக்கூடங்களில்படிக்கும் குழந்தைகள்தங்களுடைய கற்றல்திறனை வளர்த்துக்கொள்ளமுடியும்; பிற தனியார்ப்பள்ளி மாணவர்களுக்குஈடாக நடைபோட முடியும்.