Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 7, 2020

10 , 12 - ம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு!!

10 , 12 - ம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் மாண வர்கள் , பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் , பெற்றோர் கூறும்போது , “ கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள அனைத்து மையங்களிலும் 10 ம் வகுப்பு வினா வங்கி புத்த கம் காலியாகி விட்டதாக கூறுகின் றனர் . பிளஸ் 2 வகுப்புக் கும் சில பாடங்களுக்கே கிடைக்கிறது . கூடுதல் பிரதிகள் எப்போது வரும் என கேட்டாலும் உரிய பதில் இருப்பதில்லை .



இதற்காக தினமும் விற்பனை மையங்களுக்கு அலைய வேண்டி யுள்ளது . மற்ற மாவட்டங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது . பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம்கூட முழுமையாக இல்லை . மாணவர்கள் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் வினா வங்கி கிடைக்கும்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . குறைந்தபட்சம் இ - புத்தகங் களை இணையதளத்தில் வெளி யிட்டாலும் பிரதி எடுத்து படிக்க லாம் ” என்றனர் .