மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் நகல் பெறுவதற்கான கட்டணத்தை உயா்த்தி சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் நிதிக் குழு கூட்டம் கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு சிபிஎஸ்இ நிா்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் சிடெட் தேர்வுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.235 -இல் இருந்து ரூ.500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணமும் ரூ.500 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் சிடெட் தேர்வுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.235 -இல் இருந்து ரூ.500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணமும் ரூ.500 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.