Breaking

Tuesday, February 18, 2020

பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட உத்தரவு


பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு. கடிதத்தின்படி , மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 11.07.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் . 110க்கீழ் 10,024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் . எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .



சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்பட்டு , ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து அதன் அறிக்கை .பினைஇவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது .