Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 9, 2020

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்





தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தட்சிணாமூர்த்தி மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் வெங்கட்ராமன் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் சுரேஷ்குமார் மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தனர் மாநில துணைத் தலைவர் திருமதி பிலோமினா அவர்கள் வரவேற்று பேசினார் கோரிக்கையை விலக்கி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு சங்கர் சிறப்புரையாற்றினார் அவர் பேசும்போது 15 ஆண்டுகளாக உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் மற்றும் நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 30 மாவட்டங்களில் நடைபெற்றது நிறைவாக மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் அவர்கள் நன்றி கூறினார்