இஞ்சியை பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ வைக்கவும். பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் அவிய விட வேண்டும். சிறிது நேரத்தில் மஞ்சள் நிறத்தில் மாறத்தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரை வடிக்கட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
பின் சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்க்கால்களில் படும் விதமாக பயன்படுத்துங்கள். இது ½ மணி முதல் 1 மணி நேரம் வரை தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்து தலை முடியையை கழுவுங்கள்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் தலை அரிப்பு குறைந்து விடும். மேலும் அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம். இப்படி செய்தால் பொடுகு தொல்லையில் இருந்து இயற்கையாகவே விடுதலை பெறலாம்.
Super
ReplyDelete