Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 13, 2020

RTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை!

பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை. பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்று வைத்தாலே போதும் என்பதற்குரிய ஆர்டிஐ தகவல்.





எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும் .




* வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள் , Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை . அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது . தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86 ( a ) - ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர் .




* வருமான வரியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 80CCD ( IB ) ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS , அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.

என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன்
Mr . உதுமான்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருச்சி மாவட்டம்
9790328342