Search This Blog

Monday, March 30, 2020

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

0 comments

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment