மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகளின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு களப் பணியில் ஆதாரப் பணியாளராக தெரிவு செய்யப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் , பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தொடர்புடைய பள்ளித்தலைமையாசிரியர் கையொப்பத்துடன் அப்படிவத்தினை இவ்வலுவலக சி4 பிரிவு அலுவலரிடம் 06 . 03 . 2020 அன்று காலை 11 மணிக்குள் நேரில் ஒப்படைத்திட தொடர்புடைய தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆய்வு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

இணைப்பு - ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் படிவம்.


Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories