Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 12, 2020

NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 412 பயிற்சி மையங்களும் தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


2019 - 20 ஆம் கல்வியாண்டில் 03.05.2020 அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 412 பயிற்சி மையங்களில் 24 . 09 . 2019 முதல் 05.01.2020 வரை வார இறுதியில் முதுகலை ஆசிரியர்கள் மூலம் மாணவ / மாணவிகளுக்கு NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பின் , E box எனும் நிறுவனம் இணையவழி மூலமாக 412 பயிற்சி மையங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது . இவ்வகுப்பிற்கான சோதனை முன்னோட்டம் 17 . 03 . 2020 ( செவ்வாய்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது .




எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் மேற்கண்ட சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைப்பு வசதிகளை ( 2 Mbps speed குறையாமல் ) சரிப்பார்த்து கொள்ளுமாறும் , 17 . 03 . 2020 அன்று ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளரை ( Co - ordinator ) தவறாமல் வருகை புரியுமாறும் மற்றும் அச்சோதனை முன்னோட்டத்தின் செயல்பாடு குறித்த விவரங்களை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறும் அனைத்து பயிற்சி மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment