Tuesday, April 7, 2020

JEE - தேர்வுக்கான விண்ணப்பத்தை திருத்த, கூடுதல் அவகாசம்!

ஜே.இ.இ., தேர்வுக்கான விண்ணப்பத்தை திருத்த, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்டவற்றில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தேசிய அளவில், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மே இறுதியில் நடத்தப்பட உள்ள இந்த தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களில் தவறுகள் ஏதாவதுஇருந்தால், அவற்றை திருத்தம் செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள், ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கான இணையதளத்தில், வரும், 14ம் தேதி வரை பிழைகளை திருத்தலாம் என, தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment