Subscribe Us

Tuesday, May 26, 2020

விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 200% அதிகரிப்பு.


பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியானது மே 27 முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையே அறை ஒன்றுக்கு 8 பேர் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மையங்களின் எண்ணிக்கையானது 67 இருந்து 202 ஆக அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் 10,000 தலைமை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களும், நாளை மறுநாள் முதல் 32,000 ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இவர்களுக்காக 1.20 மாஸ்க்குகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed