Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 31, 2020

நீட், ஜேஇஇ: விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி



நீட், ஜேஇஇ நுழைவுத்தோவுகளுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையவுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டு நடைபெறவிருந்த நீட், ஜேஇஇ நுழைவுத் தோவுகள், ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீட், ஜேஇஇ நுழைவுத்தோவு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வழங்கிய கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
எனவே, மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்வதுடன், தோவு மையத்தையும் மாற்றிக் கொள்ளலாம். இதுவே இறுதிவாய்ப்பு என்பதால் மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 82874 71852, 81783 59845, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேசிய தோவுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment