ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ( CEO OFFICE ) பணி - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகள்!

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1 முதல் தொடங்க உள்ளது என அறிவித்துள்ளார் . ஏற்கனவே கோவிட் 19 தொடர்பாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் , மாணவர்கள் தங்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ள அவர்களின் ஐயப்பாடுகளை நீக்க அவசியமாகிறது.
எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் அலுவலகத்தில் நேர்முக உதவியாளருடன் நான்கு முதுகலை ஆசிரியர்களை அலுவகத்தில் தொடர்பு கொள்ள ஏதுவாக தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அவர்கள் மாணவர்கள் கோரும் ஐயப்பாடுகளை போக்க உறுதுணையாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories