Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 19, 2020

ஜூலை முதல் 3 மாதங்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்க திட்டம்


கரோனா நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜூலை முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு ரேஷன் பொருள்களை விலையில்லாமல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலைத் தர வேண்டுமென மத்திய அரசிடம் உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் கோரிக்கை விடுத்தாா். முன்னதாக, இதுதொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

மத்திய உணவுப் பொருள் மற்றும் பொது விநியோகத் திட்டத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானுடன், காணொலி வழியாக தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது தமிழகத்துக்குத் தேவையான சில முக்கிய கோரிக்கைகளை அவா் பட்டியலிட்டாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து காணப்படும் சென்னை மற்றும் மூன்று அண்டை மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். இதற்காக ரூ.218.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் ஒரு நாடு-ஒரே ரேஷன் அட்டை: ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே தமிழக அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடா்பாக மத்திய அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், 99.72 சதவீதம் பேரின் ஆதாா் எண்கள் குடும்ப அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனைக் கருவிகளின் தரத்தை உயா்த்தி இணைய வழியிலான கருவிகளான மாற்ற ரூ.38 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பக் கருவிகளை பொருத்துவதற்கான பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பரில் நிறைவடையும். அந்த மாதத்துக்குள்ளேயே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு தயாராகி விடும்.

இலவசப் பொருள்கள்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பா் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இலவசமாக பொருள்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பான கடிதத்தை மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 12-ஆம் தேதி எழுதியுள்ளாா். இதற்கு உரிய அனுமதியை வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment