புதுடில்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியானது. இதில் சென்னை மண்டலம் 2வது இடத்தை பிடித்தது.நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றது. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 13ம் தேதி வெளியான நிலையில், இன்று (ஜூலை 15) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
மாணவர்கள் http://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மொத்தம் பதிவு செய்த 18,85,885 மாணவர்களில் 18,73,015 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 17,13,121 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 91.46 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 0.36 சதவீதம் அதிகமாகும்.மண்டல வாரியாக தேர்ச்சி விகிதம்திருவனந்தபுரம் - 99.28 சதவீதம்சென்னை - 98.95 சதவீதம்பெங்களூரு - 98.23 சதவீதம்புனே - 98.05 சதவீதம்அஜ்மர் - 96.93 சதவீதம்புவனேஷ்வர் - 93.20 சதவீதம்போபால் - 92.86 சதவீதம்சண்டிகர் - 91.83 சதவீதம்பாட்னா - 90.69 சதவீதம்டேராடூன் - 89.72 சதவீதம்பிரக்யாராஜ் - 89.12 சதவீதம்நொய்டா - 87.51 சதவீதம்டில்லி மேற்கு - 85.96 சதவீதம்டில்லி கிழக்கு - 85.79 சதவீதம்கவுகாத்தி - 79.12 சதவீதம்
No comments:
Post a Comment