Search This Blog

Tuesday, July 28, 2020

10ம் வகுப்பிற்கு மதிப்பெண்களா? கிரேடு முறையா? - அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

0 comments

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிக்கு, மதிப்பெண்கள் வழங்குவதா அல்லது கிரேடு முறை பின்பற்றப்படுவதா? என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment