Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 25, 2020

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? - அமைச்சர் , செங்கோட்டையன் விளக்கம்.


ஆகஸ்ட் முதல் வாரத்தில் , எஸ்.எஸ்.எல்.சி. , மதிப்பெண் சான்று வழங்க , நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது , ' ' என , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடில் , நேற்று அவர் கூறியதாவது : பள்ளிகள் திறப்பு குறித்து , மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது . வரும் மாதம் அல்லது செப் . , மாதம் திறக்கலாமா என கேட்டுள்ளனர். தற்போது , கொரோனாபரவல் , பல மாவட்டங்களில் அதகமாக உள்ளது. எனவே , அதை கட்டுக்குள் கொண்டு வந்து , பெற்றோர் விருப்பங் செங்கோட்டையன்களை அறிந்து , அரசு முடிவை தெரிவிக்கும்.

இதற்கான பணி , முதல்வர் தலைமையில் நடந்து வருகிறது . மேல்நிலை வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் , ஒன்று முதல் , 10 ம் வகுப்பு வரை , படிப்படியாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் . ஆக . , முதல் வாரத்தில் , எஸ்.எஸ்.எல்.சி. , மதிப்பெண் சான்றிதழ் வழங்க , நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இவ்வாறு , அவர் கூறினார்.

No comments:

Post a Comment