நாட்டின் சில வங்கிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன. அதன்படி மஹாராஷ்டிரா வங்கி , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவற்றில் குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் மாத சாரசரியை பராமரிக்கவில்லை என்றால், கட்டணம் விதிக்கப்படும். மேலும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும் என இந்த வங்கிகள் கூறியுள்ளன.
பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி மாத சராசரி தொகையாக ரூ.1500க்கு பதிலாக ரூ.2000 இருக்க வேண்டும். மீறினால் மாதந்தோறும் நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும்.
நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, முந்தைய காலாண்டு பராமரிப்பு விதிமுறைகளுடன் ஒப்பிடும்போது, மாத சராசரி ரூ .5,000 பராமரிக்கப்பட வேண்டும். ஒரு மாதத்தில் மூன்று இலவச பரிவர்த்தனைகள் மேல் பணத்தை திரும்பப் பெறுதல் அல்லது வைப்புத்தொகை மீது ரூ .100 கட்டணமாக வசூலிக்கப்படும். லாக்கருக்கான வைப்புத்தொகை குறைக்கப்பட்டாலும், லாக்கர் வாடகை நிலுவைத் தொகைக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்பு மற்றும் கார்ப்பரேட் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, டெபிட் கார்டு-ஏடிஎம் கட்டணங்கள் ஒரு மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, பணம் திரும்பப் பெறுவதற்கான கட்டணம் ரூ .20 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8.5 ஆகவும் உள்ளன.
கோட்டக் மஹிந்திரா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு வகையைப் பொறுத்து சராசரி குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆக்சிஸ் வங்கியும் பெரிய மாற்றங்களைச் செய்யப் போகிறது.
இப்போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்கு நிதியை மாற்றக்கூடிய சேவையான ஈசிஎஸ் பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். முந்தைய ஈ.சி.எஸ் பரிவர்த்தனை கட்டணம் பூஜ்ஜியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment