கடந்த மாதம் , 19 முதல் , நேற்று வரை , இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் , அரசு அலுவலகங்களில் , 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றினர்
இன்று முதல் , அரசு அலுவலகங்களில் , 19 ம் தேதிக்கு முன்பிருந்த நிலை தொடரும் என , அரசு அறிவித்துள்ளது . எனவே , பழைய முறைப்படி , 50 சதவீத பணியாளர்கள் , இன்று முதல் , சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர் .
முதல் குழுவில் இடம் பெற்றுள்ள ஊழியர் கள் , இன்றும் , நாளையும் பணிபுரிவர் . அடுத்த இரண்டு நாட்கள் , இரண்டாவது குழு ஊழியர்கள் பணிபுரிவர் . அதன் பின் , முதல் குழு ஊழியர்கள் பணிபுரிவர் .
No comments:
Post a Comment