Join THAMIZHKADAL WhatsApp Groups

பள்ளி மாணவர்களுக்கு, தபால் மற்றும் கூரியர் சேவை வாயிலாக, பாட புத்தகங்களை அனுப்புவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
கொரோனா தொற்று பிரச்னையால், ஜூனில் திறக்க வேண்டிய பள்ளி, கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியில் வகுப்புகளை நடத்துகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் உள்ளதால், அவர்களுக்கு உரிய நேரத்தில் பாடங்களை நடத்த வேண்டியது அவசியம்.
பாட புத்தகங்களை கூரியர் வழியே அனுப்பும் திட்டம் ஏற்கனவே, தமிழ்நாடு பாட நுால் கழகத்தில் அமலில் உள்ளது.அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment