Thamizhkadal WhatsApp Channel

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது


தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. www.tngasa.in, www.tndceonline.org-இல் ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு இந்த ஆண்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. இளநிலை பட்டப்படிப்பில் சேர சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையவசதி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்க 38 மாவட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 044-22351014 / 22351015 என்ற எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை அறியலாம்.51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு www.tngptc.in, www.tngptc.com ல் விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையவழி விண்ணப்ப முறை அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories