இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறை பயன்படுத்த மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது இந்தியாவில் கூகுளை பே, paytm போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இறங்க facebook நிறுவனம் மும்முரமாக நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
facebook நிறுவனத்தின் ஒரு அங்கமான வாட்சப் நிறுவனம் தற்போது google pay போன்று செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக RBI உடன் இருக்கும் வங்கிகளுடன் இணைய ஏற்பாடுகள் செய்துவருகிறது.
இந்த Watsapp pay முலம் நடுத்தர தொழிலாளர்கள் பயணப்பெறும் வகையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை இந்தியாவில் நிலை நாட்ட facebook இந்த முயற்சியை எடுத்துள்ளது. ஏற்கனவே 2018-ல் Watsapp pay பல நாடுகளில் அறிமுகமாகியுள்ளது.
இந்த Watsapp pay மூலம் இன்சூரன்ஸ், சிறுகடன், ஓய்வூதியம் போன்றவற்றை WhatsApp pay மூலம் பெற்றுக்கொள்ள ஏதுவாக வசதி செய்யப்பட்டுள்ளது என வாட்சப் இந்திய தலைமை செயல் அதிகாரி அபிஜித் போஸ் கூறினார்.
No comments:
Post a Comment