Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 16, 2020

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: பள்ளிகளில் நாளை (ஆக.17) முதல் விநியோகம்


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் (ஆக.17) விநியோகம் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக் கொள்ள வேண் டும்.

இதைத்தொடர்ந்து சான்றிதழ்களை நாளை (ஆக.17) முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். அதேபோல், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின்தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment