Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 24, 2020

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

அதன்படி, கடந்த 17-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

கடந்த 10-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதை அடுத்து, பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான சேர்க்கை இன்று தொடங்கும் என்று அரசு அறிவித்து. 

இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்கையை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment