Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 5, 2020

பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி கூறியுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், பிளஸ்1 மாணவர்கள், பிளஸ் 2 மறு தேர்வர்கள் தங்களின் இணைய மதிப்பெண் பட்டியலை பள்ளியிலும், தேர்வெழுதிய மையத்திலும் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு பிளஸ் 1 மாணவர்கள் ஆகஸ்ட் 5 முதல்12-ம் தேதி வரையும்.

பிளஸ் 2 மறுதேர்வர்கள் ஆகஸ்ட் 5, 6, 7-ம் தேதிகளிலும் பள்ளிகள், தேர்வெழுதிய மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற எல்லா பாடங்களுக்கும் 275ரூபாயும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் உயிரியல் பாடத்துக்கு 305ரூபாயும், இதர பாடங்களுக்கு 205ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment