Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 15, 2020

வீட்டின் வாசலில் தப்பி தவறி கூட இந்த செடியை வளர்க்காதீர்கள் ..மீறினால் பேராபத்து உங்களுக்குத்தான்!


பொதுவாக மரங்கள், செடிகள், கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும், செடிகளையும் நீங்கள் வளர்த்து வந்தாலே போதும்.

எந்த விதமான வாஸ்து தோஷங்களும் நீங்கி விடும். மரம், செடி, கொடிகளை வளர்ப்பவர்கள் எது கிடைத்தாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்த்து விடக் கூடாது. இதனால் சில தோஷங்கள் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.அந்த வகையில் வீட்டின் முன் பக்கம் எந்த செடிகளை கட்டாயம் வளர்க்க கூடாது? ஏன் வளர்க்கக் கூடாது? என்பதை பற்றிய சுவாரசிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அதிர்ஷ்டம் உண்டாக்கக் கூடிய செடி வகைகள், துரதிர்ஷ்டத்தை தரும் செடி வகைகள் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது. அதில் விதி விலக்குகளும் சில உண்டு. உதாரணத்திற்கு முட்கள் நிறைந்துள்ள, வாசம் இல்லாத செடி வகைகள் துரதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்கிறது சாஸ்திரம்.

சாத்திரம் என்றால் எந்த சாஸ்திரம் சொல்கிறது என்று கேட்காதீர்கள். வாஸ்து சாஸ்திரமும், ஜோதிட சாஸ்திரமும் தாவர வகைகளுக்கு ஒரே கூற்றை தான் கூறுகின்றன.மருதாணி, ரோஜா போன்ற செடிகள் உள்ளன. இவைகளும் முட்கள் நிறைந்த செடிகள் தான். ஆனால் இவைகள் அதிர்ஷ்டத்தை தரக் கூடியது. இது போல் ஒவ்வொரு செடி வகைகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை தரவல்ல குணம் உள்ளது.

அந்த வகையில் வீட்டின் முன்னால் அரளிச் செடியை கட்டாயம் வளர்க்கக் கூடாது என்கிறார்கள். அரளிச் செடி தெய்வீக குணங்களை கொண்டது அல்ல. அரளிச் செடி தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
பூஜைகளிலும், அர்ச்சனைகளும் அரளிப் பூ பயன்பட்டாலும் அதை வீட்டின் முன்னால் வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல.

அரளிச்செடி தோட்டம், வீட்டின் பின்புறம் போன்ற பகுதிகளில் வைத்து வளர்க்கலாம். வீட்டின் முன்னால் அரளிச் செடி வளர்ப்பவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் ஆதரவும், நட்பும் பிரச்சனையாகவே எப்போதும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும்.

எவ்வளவு தான் நீங்கள் ஒற்றுமையாக வாழ நினைத்தாலும் இந்த செடியின் அதிர்வலைகள் அதனை சீர்குலைக்கும் வண்ணம் இருக்கும். தெய்வீக செடிகளுக்கு நல்ல அதிர்வலைகளை உண்டாக்கக் கூடிய தன்மை இருக்கும். அத்தகைய செடி வகைகளை நீங்கள் வீட்டில் முன்னால் வளர்த்து வந்தால் நிறைய நன்மைகள் உண்டாகும்.

வாசனை மிக்க மலர்களும், தெய்வீக குணங்களும்,
நல்ல அதிர்வலைகளை உண்டாக்க வல்லதுமான செடிகளை நிலைவாசல் படியின் நேரெதிரே வீட்டிற்கு முன்னால் வளர்த்து வந்தால் அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பார்கள்.

அந்த வகையில் முதலில் இருப்பது துளசி செடி. இந்த மூன்று குணங்களும் துளசிச் செடிக்கு நிறையவே உள்ளன. அதே போல் மருதாணி செடிக்கும் உண்டு. மருதாணி முட்கள் நிறைந்ததாக இருந்தாலும், மருதாணியை மகாலட்சுமிக்கு இணையாக பார்ப்பதால் மருதாணியும் நல்லது தான்.

No comments:

Post a Comment