Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 16, 2020

வாய்ப்புண் வேகமாக குணமாக சிறந்த வழி !...


வாய்ப்புண் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன எனவே அந்த வாய்ப்புண் சரி செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

பொதுவாக வாய் புண் வந்துவிட்டால் நாம் எதையும் சாப்பிடவே முடியாது. இந்த வாய்ப்புண் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் வருகின்றது. உங்களுக்கு ஒரே இரவில் இந்தப் புண் குணமாக வேண்டும் என்றால் இதனை மற்றும் குடித்து வாருங்கள் கண்டிப்பாக உடனே சரியாகிவிடும்.

பொதுவாக வாய் புண் எதற்கு வருகிறது என்றால் நம் வயிற்றுப் பகுதியில் ஏதாவது புண் இருந்தால் கண்டிப்பாக அது வாயில் தெரியும் என்பது உண்மையாகும். எனவே உங்களுக்கு அல்சர் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக வாய்ப்புண் வரும். வாய்ப்புண் வருகிறது இருந்தால் உங்களுக்கு அல்சர் இருக்கிறது என்று அர்த்தம்.

தேங்காய் பால் சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்கு இருக்கின்றன எனவே தேங்காய்பால் கண்டிப்பாக சாப்பிட்டு வரவேண்டும். தேங்காய் பால் சாப்பிடுவதால் நம் சருமம் பளபளப்பாக இருக்கும். மற்றும் வயிற்றில் இருக்கும் புண்கள் எல்லாம் சரியாகிவிடும். அதுமட்டுமல்லாமல் வாயில் புண்கள் வந்தால் தேங்காய் பால் தினமும் 2 முறை சாப்பிட்டு வந்தால் போதுமானது இரண்டே நாட்களில் உடனே வாய்ப்புண் சரியாகிவிடும்.

தேங்காய்பால் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருக்கிறது என்றால் தேங்காய் பால் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக தலை முடி பிரச்சனையில் இருந்து விடுபட்டு விடலாம். அதாவது பொடுகுத் தொல்லை மற்றும் முடி கொட்டுவது மற்றும் முடி அடர்த்தியாக வேண்டுமென்றால் தேங்காய் பால் பயன்படுத்துங்கள்.

உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் முற்றிலுமாக நீங்குவதற்கு சிறிது தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் தேன் கலந்து உங்கள் முகத்தில் தடவிவர வேண்டும். பின்பு அதனை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவினால் கண்டிப்பாக உங்கள் சருமம் பளபளப்பாகும் மற்றும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கிவிடும். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.

குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் கண்டிப்பாக அவர்களால் எதையும் சாப்பிடவே முடியாது மிகவும் கஷ்டப்படுவார்கள் எனவே அவர்களுக்கு உடனே சரியாக வேண்டுமென்றால் அவர்களை தண்ணீர் அதிகமாக குடிக்க சொல்லுங்கள் மற்றும் தேங்காய் பால் செய்து கொடுங்கள். தேங்காய் பால் சாப்பிட்டால் உடனே வாய்ப்புண் சரியாகிவிடும். இதனை காலை மாலை என இருவேளைகளும் குழந்தைகள் சாப்பிட்டு வரவேண்டும்.

மற்றும் குழந்தைகள் தேங்காய் பால் சாப்பிட பழகி விட்டார்கள் என்றால் அவர்கள் நிறம் வென்மையாக மாறிவிடும். மற்றும் அவர்களுக்கு கரும்புள்ளி மற்றும் பருக்கள் பிரச்சினை இருக்கவே இருக்காது.

No comments:

Post a Comment