Breaking

Wednesday, August 26, 2020

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு..



பொறியியல் கலந்தாய்வில் பங்குபெற தகுதி பெற்றுள்ள சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் இன்று வெளியிடப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.

அவர்களுக்கான ரேண்டம் எண்களை, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற உள்ள நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட உள்ளார்.

No comments:

Post a Comment