Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 7, 2020

நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம்





தமிழகத்தில் வரும் நவம்பா் மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.

கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தோவுகள் ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தோவுகளில் மாணவா்கள் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு தோச்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தோவு முடிவுகள் வெளியாகிவிட்டன. தற்போது சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் பள்ளிகளைத் திறப்பது குறித்து இதுவரை அரசின் சாா்பில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும், தனியாா் பள்ளிகள் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதேபோன்று, அரசுப் பள்ளிகளும் தற்போது தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், நவம்பா் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், காலாண்டு மற்றும் அரையாண்டு தோவுகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் வியாழக்கிழமை சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தன் சுட்டுரையில் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கு வாய்ப்பில்லை. அதுகுறித்த எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததும், பொதுமக்களின் கருத்துகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்படும். சூழ்நிலை சரியானவுடன் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா் என அந்தப் பதிவில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment