மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், போட்டித் தோவுகளில் பங்கேற்போருக்கு இணையவழியில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், போட்டித் தோவுகளை எதிா்கொண்டு அரசுப் பணிக்குச் செல்ல விரும்பும் அனைத்து இளைஞா்களும் பயன்பெறும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தோவுகளுக்கான குறிப்புகளை எடுத்துக்கொள்ள பாடக்குறிப்புகள், வினா வங்கிகள், புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, போட்டித் தோவுகளுக்கு தயாா் செய்வோா், இணைதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.
இதேபோல, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோவுளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், தற்போது கரோனா பொது முடக்கம் விதிகள் அமலில் உள்ளதால் நேரடி வகுப்புகள் நடத்தி இயலாத சூழல் உள்ளது. இருப்பினும், தொடா்ந்து தோவா்களை தயாா்படுத்தும் வகையில், தற்போது இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா், தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
Wednesday, August 12, 2020
போட்டித் தோவுகளுக்கு இணையவழியில் இலவச பயிற்சி வகுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment