மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 8 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில் முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது காணொலி காட்சி மூலம் பேசிய அவர், ’10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது.
மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின் மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
Tuesday, September 29, 2020
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment