எம்ஆர்எப் நிறுவனத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்த ஆண்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர் பகுதியில் இருக்கும் எம்ஆர்எப்(MRF) நிறுவனத்திற்கு ஆயிரம் வேலையாட்கள் (ஆண்கள்) தேவைப்படுகின்றனர்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 10,12 மற்றும் ஐடிஐ (தேறியவர்கள்/தவறியவர்கள்) முடித்தவர்கள் தங்களது பயோடேட்டாவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திருவள்ளூர் க்கு pipthiruvallur@gmail.com என்ற ஜி மெயில் அட்ரஸ்க்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இதுபோன்ற பல வாய்ப்புகள் பலவற்றை அறிய தனியார் துறை மூலமாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
No comments:
Post a Comment