கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர செப்டம்பர் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இவை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களும் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் செப்டம்பர் 30 தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்மந்தப்பட்ட பள்ளியில் அக்டோபர் 1-ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள். மேலும் சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்ப்பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் அக்டோபர் 3-ம் தேதி இணையதளத்திலும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அ. கருப்பசாமி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Tuesday, September 15, 2020
25 சதவிகித இடஒதுக்கீடு: செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம்
Tags
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க
Tags
விண்ணப்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment