தகவல் பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவும் வாட்ஸ் அப் செயலி ஐந்து புதிய அப்டேட்களை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த அப்டேட்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
க்ரூப் கால் வசதிகளில் வெவ்வேறு ரிங்டோன்கள் வைத்துக்கொள்ளக்கூடிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் கொண்டு வரக்கூடும் என தெரிகிறது. இதன் மூலம் தனிப்பட்ட அழைப்புகள் மற்றும் குழு அழைப்புகளை வேறுபடுத்த முடியும்.
முன்பு, வாட்ஸ்அப் டூடுல்கள் அதன் டெஸ்க்டாப் அல்லது வெப் பதிப்பில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த புதிய வாட்ஸ் அப் அப்டேட்டில், ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் டூடுல்பயன்பாடு அறிமுகப்படுத்தக்கூடும் .
அழைப்பிற்கான பட்டன் கீழ்ப் பகுதிக்கு மாற்றப்படும் என்றும் அதனோடு தகவல் பட்டன் , ஆடியோ பட்டன் மற்றும் கேமரா , மெசேஜ் பட்டன் கொண்ட வீடியோ பட்டன் ஆகியவை அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
ஏராளமான அனிமேட்டட் ஸ்டிக்கர்களையும் அடுத்த அப்டேட்டில் வாட்ஸ் அப்பில் கொண்டு வர உள்ளது.
வணிகக் கணக்கைப் பொறுத்தவரை, போர்ட்ஃபோலியோவை உடனடியாகக் காட்டும் ஷார்ட் கட் வழிமுறையைக் கொண்டுவரவிருக்கிறது வாட்ஸ் அப். புதிய அழைப்பு பட்டனைச் சேர்க்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment