Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 16, 2020

வேளாண் பல்கலைக் கழகத்தில் அக்., 5 வரை விண்ணப்பிக்கலாம்!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்புக்கு அக்டோபர் 5- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியும் செப்டம்பர் 29- ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 15- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 10 இளமறிவியல் படிப்புகளுக்கு இணையத்தளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மாணவர்கள் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

No comments:

Post a Comment