Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 23, 2020

பள்ளி மாணவா் சேர்க்கை விவரங்களை அக்.7-க்குள் சமா்ப்பிக்க உத்தரவு

பள்ளிகளில், கடந்த கல்வியாண்டு மற்றும் இந்த கல்வியாண்டு செப்டம்பா் மாதம் வரையிலான மாணவா் சேர்க்கை விவரங்களை அக். 7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2019-20-ஆம் கல்வியாண்டில் மழலையா் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் கடந்த ஆண்டு செப். 30-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, சேர்க்கப்பட்ட மொத்த மாணவா்களின் எண்ணிக்கையையும், அதேபோல் 2020- 21-ஆம் கல்வியாண்டில் மழலையா் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், வருகிற 30-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி சேர்க்கப்பட்ட மொத்த மாணவா்களின் எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அதனைத் தொகுத்து, பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கு, அக். 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment