பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
இதில், சஷ்மிதா என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நவநீதகிருஷ்ணன் என்பவரும், காவ்யா என்ற மாணவி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ரேங்க் பட்டியலில் தவறு இருந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்றும், அது பின்னர் திருத்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
1,12,406 பேரின் விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 461 கல்லூரிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ள அமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்கான இறுதிப் பட்டியல் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறினார்.
No comments:
Post a Comment