எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான பொதுத் தேர்வு, வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இதனை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வா்கள், தங்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தனித்தேர்வா்கள், அனுமதிச் சீட்டின்றி தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது. எனவே, தங்களுக்குரிய அனுமதிச் சீட்டை, தனித்தேர்வா்கள் விரைவாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories