Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 11, 2020

எளிதாக கடன் பெறலாம் - எஸ்பிஐ வங்கியின் புதிய அதிவேக திட்டம்..!

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பல்வேறான் கடன் சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் பொதுத்துறை நிறுவனமான SBI வங்கி அதிவேக கடன் ( Express loan )என்ற திட்டம் மூலம் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அறிமுகபடுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களை தவிர்த்து ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எவரேனும் தங்களின் ஊதிய பட்டியலை சமர்பித்து இந்த எளிதான கடன் உதவி திட்டத்தை உடனே பெற முடியும் .

இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூபாய் 13 இலட்சத்தை மிக குறைந்த வட்டி வீதத்தில் மிகவும் எளிதான வழிமுறைகளின் மூலம் பெறலாம்.

இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் பயனாளிகளுக்கான அதிகபட்சமான வட்டி வீதம் ஆண்டுக்கு 12% , குறைந்தபட்சமாக 9 % வரை சலுகை பெறலாம்.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1. சம்பள பட்டியல் ( Pay slip )
2. ஆதார் நகல் ( photocopy of Aadhaar )
3‌. பான் கார்டு ( photocopy of Pan card )
4. ஆறு மாதத்திற்கான சம்பள பட்டியல் ( last six month of statement )
5. புகைப்படம் ( Photo )
6. விண்ணப்ப படிவம் ( Application with self attested )

No comments:

Post a Comment